செய்திகள்
விபத்து பலி

பரமத்திவேலூர் அருகே விபத்தில் காவலாளி பலி

Published On 2020-08-12 15:38 GMT   |   Update On 2020-08-12 15:38 GMT
பரமத்திவேலூர் அருகே விபத்தில் காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் மேல தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 65). இவர் நல்லூர் கந்தம்பாளையம் அருகே உள்ள இரும்பு உருக்கு ஆலை ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் பணியை முடித்து விட்டு மொபட்டில் பரமத்திவேலூர் திரும்பிக்கொண்டு இருந்தார். மாவுரெட்டி பகுதியில் வந்த போது அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News