செய்திகள்
யோகா பயிற்சி

ஈஷா யோகா மையம் சார்பில் சிறை கைதிகளுக்கு ‘ஆன்லைன்’ மூலம் யோகா பயிற்சி

Published On 2020-08-12 10:21 GMT   |   Update On 2020-08-12 10:21 GMT
ஈஷா யோகா மையம் சார்பில் சிறை கைதிகளுக்கு ‘ஆன்லைன்’ மூலம் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
சென்னை:

ஈஷா யோகா மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக சிறைத்துறை உயர் அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று, சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, சேலம், மதுரை, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் இருக்கும் அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும் இலவச ‘ஆன்லைன்’ யோகா வகுப்புகள் கடந்த ஜூலை 28-ந் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஜக்கி வாசுதேவால் பயிற்றுவிக்கப்பட்ட ஈஷா யோகா ஆசிரியர்கள் இவ்வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்துகின்றனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகள் மட்டுமின்றி சிறை வார்டன்கள் மற்றும் பணியாளர்களும் இந்த வகுப்பில் பங்கேற்று பயன் பெறுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News