search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறை கைதிகள்"

    • 640 ஆண் கைதி அறைகள் கொண்ட இந்த சிறையில் கடந்த சில மாதங்களாக நச்சு கதிர்வீச்சு அலைகள் வீசப்படுவது கண்டறியப்பட்டது.
    • காற்றில் அளவுக்கதிமான நச்சு கதிர்வீச்சு அலைகள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    லண்டன்:

    பிரின்ஸ்டவுன் நகரில் புகழ்பெற்ற டார்ட்மூர் மத்தியச்சிறைச்சாலை உள்ளது. 640 ஆண் கைதி அறைகள் கொண்ட இந்த சிறையில் கடந்த சில மாதங்களாக நச்சு கதிர்வீச்சு அலைகள் வீசப்படுவது கண்டறியப்பட்டது. சோதனையின்போது சிறை வளாகத்தில் ரேடான் என்னும் கதிரியக்க தனிமத்தின் அளவு அதிகரித்து காணப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

    இதனால் காற்றில் அளவுக்கதிமான நச்சு கதிர்வீச்சு அலைகள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிறைச்சாலையில் இருந்து 194 கைதிகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு வேறுசிறைகளில் அடைக்கப்பட்டனர். சிறைவளாகத்தில் பரவி இருக்கும் ரேடான் அளவை குறைக்கும் பணி நடந்து வருகிறது.

    • இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
    • கைதிகளுக்கு இடையேயான மோதலுக்கு என்னகாரணம் என விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறை உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு கைதிகள் 2 பேருக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

    அப்போது இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். அவர்களை அங்கிருந்த சக கைதிகள் மற்றும் வார்டன்கள் விலக்கிவிட்டனர்.

    இந்த மோதலில் 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களை சிறை வார்டன்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    இதில் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் சிகிச்சை அளிக்கப்பட்டு சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

    விசாரணையில் மோதி கொண்ட கைதிகள் முத்தியால்பேட்டையை சேர்ந்த உசேன் மற்றும் பிரதீஷ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதிகளுக்கு இடையேயான மோதலுக்கு என்னகாரணம் என விசாரித்து வருகின்றனர்.

    • 2021 முதல் தற்போது வரை அங்கு 430 கைதிகள் சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டனர்
    • எஸ்.என்.ஏ.ஐ. அமைப்பு ஆயுத வேட்டையை நடத்தி, சில கைதிகளை இடம் மாற்றியது

    தென் அமெரிக்க கண்டத்தின் மேற்கு கடற்கரையோரம் உள்ள நாடு ஈக்வடார். இதன் தலைநகரம் குவிடோ.

    இந்நாட்டின் அண்டை நாடுகளான கொலம்பியா மற்றும் பெரு ஆகியவை உலகின் மிக பெரும் கொகைன் என் போதைப் பொருள் உற்பத்தியாளர்களாக இருந்த வருகின்றன. எனினும், ஈக்வடார் நாட்டில் சமீப காலம் வரை போதை பொருள் சம்பந்தமான சிக்கல்கள் தோன்றாமல் அமைதியான நாடாகவே இருந்து வந்தது. தற்போது அங்கு நிலைமை மாறி, போதை பொருள் கடத்தலில் ஒரு முக்கிய மையமாகவே இந்நாடு மாறி வருகிறது.

    போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் கொலம்பியா மற்றும் மெக்சிகோ நாட்டை சேர்ந்த பல்வேறு குழுக்களை சேர்ந்தவர்கள் அந்நாட்டு சிறையில் கைதிகளாக உள்ளனர். அவர்களுக்கிடையே சண்டைகள் நடந்து வருவது வழக்கம். அண்மைக் காலமாக அங்குள்ள சிறைச்சாலைகளில் ஒரு கும்பலை சேர்ந்த கைதிகள் மற்றொரு போட்டி கும்பலை தாக்குவதும், கூட்டாக கொல்வதும் அதிகரித்துள்ளது.

    2021 முதல் தற்போது வரை அங்கு 430 கைதிகள் சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்படுபவர்களின் உடல்கள் கூட முழுமையாக கிடைக்காமல் துண்டு துண்டுகளாக கிடைக்கிறது. அந்நாட்டில் சிறைச்சாலை மேற்பார்வையை எஸ்.என்.ஏ.ஐ. எனும் அமைப்பு நிர்வகித்து வருகிறது.

    எஸ்.என்.ஏ.ஐ. உத்தரவின் பேரில் சிறைச்சாலையில் கைதிகள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை தேடும் வேட்டை ஒன்று நடைபெற்று அனைத்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் நடவடிக்கையாக பல கைதிகள் இடம் மாற்றி தங்க வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், தலைநகர் குவிடோவில் கையெறி குண்டு தாக்குதலும், சிறைச்சாலை மேற்பார்வையை கவனிக்கும் எஸ்.என்.ஏ.ஐ. அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஒரு காரிலும், அந்த அமைப்பு இயங்கிய அலுவலகத்தின் அருகில் ஒரு இடத்திலுமாக, 2 இடங்களில் குண்டு வெடிப்பும் நிகழ்ந்துள்ளது.

    இது சம்பந்தமாக கொலோம்பியா நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேரை காவல்துறை கைது செய்தது. இவர்கள் அனைவரும் முன்பே ஆள் கடத்தல், கொள்ளை, மற்றும் கொலைக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. தங்கள் பலத்தை காட்ட இது போன்ற வன்முறை தாக்குதல்களில் இக்குழுக்கள் ஈடுபடுவது வழக்கம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் அந்நாட்டு சிறைச்சாலையை சேர்ந்த 6 சீர்திருத்த நிலையங்களில் உள்ள கைதிகள் உட்பட 57 சிறை காவலாளிகள் மற்றும் 7 சிறை அதிகாரிகளை, அங்குள்ள போதை பொருள் கடத்தல் சிறை கைதிகள், சிறைக்குள்ளேயே பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

    அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஜுவான் ஜபாடா பணயமாக உள்ளவர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    • தண்டனை காலத்தை சிறைச்சாலைகளில் கழித்து வரும் கைதிகள் அங்கு பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள்.
    • கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய சூப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள சிறைச் சாலைகளில் தண்டனை கைதிகளாக இருப்பவர்கள் திருந்தி நல்ல மனிதர்களாக வெளியில் வருவதற்கான அனைத்து நடவடிக்கை களையும் தமிழக அரசு செய்து வருகிறது.

    கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதான குற்றவாளிகள் பலர் வழக்கு விசாரணை முடிந்து சிறையில் தண்டனை காலத்தை கழித்து வருகிறார்கள்.

    இதுபோன்று தண்டனை காலத்தை சிறைச்சாலைகளில் கழித்து வரும் கைதிகள் அங்கு பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள்.

    சிறைகளில் உள்ள தோட்டங்களில் நிலக்கடலை உள்ளிட்ட எண்ணை வித்துக்களை பயிரிட்டு அறுவடை செய்வது, இந்த நிலக்கடலையை சிறையிலேயே செக்கு எண்ணையாக தயாரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் கைதிகள் பல்வேறு பொருட்களையும் உற்பத்தி செய்து வருகிறார்கள்.

    இந்த பொருட்கள் சந்தை படுத்தப்பட்டு விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது. சிறைத்துறை டி.ஜி.பி. அம்ரேஷ் புஜாரி மேற் பார்வையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய சூப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டுள்ளன.

    எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலக வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள சூப்பர் மார்க்கெட் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மதுரையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் தினமும் ரூ.1 லட்சம் அளவுக்கு பொருட்கள் விற்பனை ஆகிக்கொண்டிருக்கின்றன.

    இப்படி சிறைச்சாலை அருகில் உள்ள சந்தைகள் பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் வர வேற்பை பெற்றுள்ளதால் சிறைகளில் உற்பத்தி அளவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தாங்கள் செய்யும் வேலையை மிகுந்த ஆர்வத்தோடு செய்ய சிறை கைதிகள் மாதம் ரூ.10 ஆயிரம் வரையில் சம்பாதிக்கிறார்கள்.

    கைதிகள் செய்யும் வேலைக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயிக்கப்படுவதால் ரூ.5 ஆயிரம், ரூ.6 ஆயிரம் என சம்பாதிக்கப்பவர்களும் உண்டு. சிறையில் தரமான சாப்பாடு உள்ளிட்டவைகள் கைதிகளுக்கு வழங்கப்பட்டு வருவதால் இந்த சம்பளம் கைதிகளுக்கு மிச்சமாகி விடுகிறது.

    கைதிகள் சம்பாதிக்கும் இந்த பணம் அவர்களிடம் நேரடியாக வழங்கப்படுவது இல்லை. இதுபோன்ற சம்பள பணத்தை கையாள்வதற்கே கணக்கர் ஒருவர் சிறைச்சாலைகளில் உள்ளார். அவர் கைதிகள் சம்பள பணத்தை பத்திரமாக வைத்திருந்து குடும்பத்தினர் பார்க்க வரும்போது அவர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்.

    இதன்மூலம் சிறையில் இருந்தாலும் கைதிகள் தங்கள் குடும்பத்துக்காக பணம் சம்பாதித்து கொடுக்கும் நிலையில் இருந்து வேலைகளை செய்து வருவது அவர்களை மனதளவில் நல்ல மனிதர்களாக மாற்றுவதற்கு உந்து சக்தியாகவே இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மதுரை மத்திய சிறை கைதிகளுக்கு ஆன்லைன் மூலம் டாக்டர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தபட்டது.
    • மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வசந்த கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    தமிழக சிறைகளில் மாரடைப்பு மரணங்கள் தொடர்கதையாக உள்ளன. போலீஸ் உயர் அதிகாரிகள் இது தொடர்பாக மருத்துவ ரீதியாக ஆய்வு செய்தனர். அப்போது கைதிகள் மட்டுமின்றி போலீசாருக்கும் மாரடைப்பு பற்றிய சரியான புரிதல்-விழிப்புணர்வு இல்லை என்பது தெரிய வந்தது.

    தமிழக சிறைச்சாலை களில் உள்ள கைதிகளுக்கும் மாரடைப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று டி.ஜி.பி. அம்ரேஷ் பூஜாரி உத்தரவிட்டார். மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கான மாரடைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தபட்டது. மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வசந்த கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து ஆன்லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாரடைப்பு சிறப்பு மருத்துவ நிபுணர் மதன்மோகன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை இருதய பிரிவு விரிவுரையாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு ஆன்லைன் மூலம் கூறியதாவது:-

    மனித உடலில் இதயம் இயங்கவில்லை என்றால் மற்ற பாகங்கள் செயல்படாது. ஒரு குடும்பம் தலைவரை இழந்தால், அவர்களுக்கு ஏற்படும் இழப்பு ஈடுகட்ட முடியாது. போலீசாரும், டாக்டர்களும் ஒன்றுதான். ஏனென்றால் வருடத்தின் 365 நாட்களும் பொது மக்களுக்கு சேவை செய்து வருகிறோம்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு 3 ஆயிரம் பேருக்கு உடல் பரிசோதனை நடத்தினோம். அதில் 300 பேருக்கு மாரடைப்பு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவர்களில் 50 பேருக்கு அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தினோம். சினிமாவில் வருகிற மாதிரி மாரடைப்பு பாதிப்பு என்பது உடனடியாக வராது. இதற்கான அறிகுறிகள் ஏற்படும். அப்போது உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது முக்கியம்.

    மாரடைப்பு பாதிப்பு ஏற்படுபவருக்கு உடலில் ரத்தம் செல்லாத பகுதியில் செல் அணுக்கள் படிப்படி யாக இறந்துவிடும். அதன் பிறகு அவரை மரணத்தின் பிடியில் இருந்து மீட்டு கொண்டு வருவது சிரமமான விஷயம். இதயத்தில் 3 தமனிகள் உண்டு. அதில் கொழுப்பு படிந்து ரத்த ஓட்டம் தடைபடுவது தான் மாரடைப்பு ஆகும்.

    நடக்கும்போது நெஞ்செரிச்சல் இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறி. சிலர் அல்சர் என்று மாத்திரை சாப்பிடுகிறார்கள். அது தவறு. சிலருக்கு படி ஏறும் போது அதிகப்படியாக மூச்சு வாங்கும். இது பிரச்சினையின் அறிகுறி. அவர்கள் உடனடியாக இ.சி.ஜி. எடுத்து பார்த்தால் மாரடைப்பு பாதிப்பு வருமா? வராதா? என்பதை கண்டறிய இயலும்.

    நெஞ்சுவலி, மயக்கம், மூச்சு வாங்கல், களைப்பு ஆகியவை மாரடைப்பின் அறிகுறி. சிகரெட் குடித்தால் இதய புற்றுநோய் வரும் என்று சொல்வார்கள். ஆனால் மாரடைப்பு தான் முக்கியமாக வரும். 10 ஆண்டுகள் சிகரெட் பிடித்தால் 100 சதவீதம் மாரடைப்பு வாய்ப்புண்டு. அப்பாவுக்கு குறிப்பிட்ட வயதில் மாரடைப்பு வந்தால் பையனுக்கும் வரும். அவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலும் பாதிப்பு வரும்.

    வயது முதிர்வு, உடல் குண்டு தன்மை, பதற்றம், நீரிழிவு, ரத்த கொதிப்பு ஆகியவை மாரடைப்பின் வேகத்தை அதிகரிக்கும். பெண்களுக்கு மெனோபாசுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால் அவர்களுக்கு மாரடைப்பு பாதிப்பு வர வாய்ப்புகள் உண்டு. 50 வயதை தாண்டிய பெண்கள் வருடாந்திர சோதனை செய்து பார்க்க வேண்டும்.

    புகை பிடிப்பதால் 4 மடங்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இ-சிகரெட் புகைத்தால் பாதிப்பு வராது என்று சொல்வார்கள். அப்படி இல்லை. மூளை பாதிப்பு ஏற்படும். 10 ஆண்டுகள் புகை பிடித்தல், மாரடைப்பு பாதிப்பு உறுதியாக வரும். அறியாத வயதில் பழகிவிட்டோம்: அறிந்த வயதில் விட்டுவிட வேண்டும். உடல்நல குறைவு என்று படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு சிகரெட் நினைப்பு வராது. உயிர் முக்கியம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

    புகையிலை, மதுபானம் அருந்தும் போது இதயத்துடிப்பு அதிகரிக்கும். பீர் குடித்தால் பாதிப்பு குறைவு என்பார்கள். அப்படி அல்ல. பீர் குடித்தால் 3 ஆண்டுகளில் இதயம் வீங்கி விடும். நீரிழிவு மிகவும் கொடியது. ஆளைக் கொல்லும் வியாதி. 10 வருடத்திற்கு பிறகு தான் பாதிப்பு தெரியும். மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் 3 மடங்கு உண்டு. ஆண்டுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு பாதிப்பு தெரிகிறது. இதில் 60 சதவீதம் பேருக்கு மரண வாய்ப்பு அதிகமுண்டு. உடற்பயிற்சி செய்தால் உடலில் நல்ல கொழுப்பு அதிகரிக்கும். இதனால் மாரடைப்பு பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். மாரடைப்பு வந்தவுடன் ஒரு மணி நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு சென்று விட வேண்டும். இல்லையெனில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×