செய்திகள்
கட்டும் பணியை கலெக்டர் சிவன்அருள் ஆய்வு

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.33 லட்சத்தில் 2-வது தளம் கட்டும் பணி- கலெக்டர் ஆய்வு

Published On 2020-08-11 13:52 GMT   |   Update On 2020-08-11 13:52 GMT
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.33 லட்சத்தில் 2-வது தளம் கட்டும் பணியை கலெக்டர் சிவன்அருள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் 2-வது தளம் கட்டப்பட்டு வருகிறது. இதில் கான்கிரீட் போடப்பட்டு வருகிறது. அது, தரமான முறையில் போடப்படுகிறதா? என்பதை கலெக்டர் சிவன்அருள் பணி நடக்கும் இடத்துக்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது அதிகாரிகள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News