செய்திகள்
தற்கொலை

சிவகாசி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2020-08-09 17:58 GMT   |   Update On 2020-08-09 17:58 GMT
சிவகாசி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:

சிவகாசி லிங்கபுரம் காலனியை சேர்ந்த ஆறுமுகம் மகன் விக்னேஷ் (வயது 33). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அச்சகத்தில் பணியாற்றி வந்தார். இவரது தாய் கடந்த சில மாதங்களுக்கு முன் இருந்து விட்டார். இதனால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட விக்னேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News