செய்திகள்
மண்ணச்சநல்லூர் அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரி முருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி:
தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகன் சளி மற்றும், காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகன் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் இதுவரை அதிமுக, திமுக என 30 சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகன் சளி மற்றும், காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகன் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் இதுவரை அதிமுக, திமுக என 30 சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.