செய்திகள்
ராமதாஸ்

இழப்பீடு தொகையை குறைத்தது வருத்தமளிக்கிறது- ராமதாஸ்

Published On 2020-08-08 01:20 GMT   |   Update On 2020-08-08 01:20 GMT
கொரோனாவால் உயிர் இழக்கும் முன்களப்பணியாளர்களுக்கான இழப்பீடு தொகையை குறைத்தது வருத்தமளிக்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த டாக்டர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இப்போது அது ரூ.25 லட்சமாக குறைக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. அறிவித்த தொகையை வழங்க வேண்டும்.

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் ரூ.1 கோடிக்கு ஆயுள் காப்பீடு பெற வேண்டும். இதன்மூலம் பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்கள் குடும்பங்களுக்கு கூடுதல் நிதி கிடைக்கும்; அரசுக்கும் அதிக செலவு ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News