செய்திகள்
கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் இன்று புதிதாக 5,880 பேருக்கு கொரோனா: 119 பேர் உயிரிழப்பு

Published On 2020-08-07 12:50 GMT   |   Update On 2020-08-07 12:50 GMT
தமிழகத்தில் இன்று புதிதாக 5,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 119 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 5,880 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 6,488 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை மொத்தம் 2,27,575 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் 119 பேர் (அரசு மருத்துவமனையில் 41, தனியார் மருத்துவமனையில் 41) உயிரிழந்ததால், ஒட்டுமொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 4,690 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 67,352 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 30,88,066 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இன்று 65,189 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 29,75,657 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Tags:    

Similar News