செய்திகள்
கொரோனா தொற்றை கண்டறிய நடமாடும் நுண் கதிர்வீச்சு வாகனம்
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கண்டறிய நடமாடும் நுண் கதிர்வீச்சு வாகனத்தை தேசிய நல குழுமத்தின் மூலம் தமிழக அரசு வழங்கியுள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கண்டறிய நடமாடும் நுண் கதிர்வீச்சு வாகனத்தை தேசிய நல குழுமத்தின் மூலம் தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த வாகனத்தின் மூலம் கொரோனா பராமரிப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நோய் தாக்கத்தை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 7 தனிமை மையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளிக்கப்படும்.
இந்த வாகனத்தை கலெக்டர் கண்ணன் நேற்று மாவட்ட சுகாதாரத்துறையிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் பழனிசாமி, ராஜன், ராம்பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.