செய்திகள்
வழக்கு பதிவு

ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி, மீன் விற்ற 3 பேர் மீது வழக்கு

Published On 2020-08-03 08:09 GMT   |   Update On 2020-08-03 08:09 GMT
நல்லம்பள்ளி அடுத்த தடங்கம் ஊராட்சிக்குட்பட்ட பழைய குவர்ட்டர்ஸ், சவுளுப்பட்டி ஆகிய இடங்களில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி, மீன் விற்ற 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அடுத்த தடங்கம் ஊராட்சிக்குட்பட்ட பழைய குவர்ட்டர்ஸ், சவுளுப்பட்டி ஆகிய இடங்களில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி நேற்று கடைகளை திறந்து மீன், இறைச்சி விற்பனை செய்வதாக அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி, மீன் கடைகளை திறந்து விற்பனை செய்த துரைசாமி சாமி கவுண்டர் தெருவை சேர்ந்த ஏழுமலை (வயது 40), காமாட்சியம்மன் தெருவை சேர்ந்த கேசவன்(40), சவுளுப்பட்டியை சேர்ந்த சக்திவேல்(32) ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Tags:    

Similar News