செய்திகள்
கள்ளக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே பெருமங்கலம் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதற்கு கிளை செயலாளர் சந்திரன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் அப்பாவு, மாவட்ட துணைச் செயலாளர் சவுரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சரவணன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார் இதில் கீழ்நாரியப்பனூர் கிளை செயலாளர் ரீதா மற்றும் வேல்முருகன், செந்தில், அண்ணாமலை, மஞ்சப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.