செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2020-07-30 09:48 GMT   |   Update On 2020-07-30 09:48 GMT
கன்னியாகுமரியில் அண்ணா சிலை அவமதிக்கப்பட்டதற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் உள்ள அறிஞர் அண்ணா சிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டியும், காவிக்கொடியையும் கட்டியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டி குப்பை வீசி அவமதிப்பு செய்யப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணா சிலையை அவமதித்த குற்றவாளிகளை கைது செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

குமரியில் பேரறிஞர் அண்ணாவின் சிலையை மர்மநபர்கள் அவமதித்து, பீடத்தில் காவிக்கொடி கட்டிய செயலை கண்டிக்கிறேன்.

சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News