செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

சிவகாசியில் ஒரே கிராமத்தில் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-07-28 11:36 GMT   |   Update On 2020-07-28 11:36 GMT
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஒரே கிராமத்தில் 51 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி :

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவும் நீண்ட நாட்களாக அமலில் இருந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது, 6-வது கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,993 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 77 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,571 ஆக அதிகரித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே டி.கான்சாபுரம் கிராமத்தில் 51 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

51  பேருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து டி.கான்சாபுரம் கிராமம் முழுவதும் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News