செய்திகள்
தற்கொலை

கடையம் அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2020-07-27 11:51 GMT   |   Update On 2020-07-27 11:51 GMT
கடையம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையம்:

கடையம் அருகே மேட்டூரை சேர்ந்தவர் செல்வராஜ் (45). கூலி தொழிலாளி. இவர் மது குடிப்பதற்கு தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் செல்வராஜ், அங்குள்ள மின்வயரை தனது உடலில் சொருகி மின்சாரத்தை பாய்ச்சினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News