செய்திகள்
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

அதிமுக மாணவர் அணி சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்

Published On 2020-07-27 09:39 GMT   |   Update On 2020-07-27 09:39 GMT
கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், கோவை மாநகர் மாவட்ட மாணவர் அணி சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி கோவை வடவள்ளி பஸ் நிலையத்தில் நடந்தது.
வடவள்ளி:

கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், கோவை மாநகர் மாவட்ட மாணவர் அணி சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி கோவை வடவள்ளி பஸ் நிலையத்தில் நடந்தது. பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினார்கள். இதில் வடவள்ளி பகுதி செயலாளர் செல்வராஜ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் மணிகண்டன், துணை செயலாளர் செந்தில்குமார், வட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News