செய்திகள்
கொரோனா வைரஸ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது

Published On 2020-07-27 08:02 GMT   |   Update On 2020-07-27 08:02 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று புதிதாக 176 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 5,085 ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 176 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 5,085 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News