செய்திகள்
விபத்து பலி

மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த முதியவர் பலி

Published On 2020-07-26 07:19 GMT   |   Update On 2020-07-26 07:19 GMT
மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது 60). இவர் சம்பவத்தன்று பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் முருகேசன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகேசனை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முருகேசன் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News