செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

சிவகாசி அருகே மின்சாரம் தாக்கி டிரைவர் பலி

Published On 2020-07-25 10:10 GMT   |   Update On 2020-07-25 10:10 GMT
சிவகாசி அருகே மின்சாரம் தாக்கி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:

சிவகாசி ஆனைக்குட்டம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 41). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன் தினம் மதியம் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை ஓட்டிச் சென்றார். பின்னர் அவர் வாகனத்தில் சரக்குகளை ஏற்ற முயன்ற போது அந்த பகுதியில் சென்ற உயர்மின் அழுத்த மின்சார கம்பியின் மீது எதிர்பாராதவிதமாக வாகனத்தின் கதவு பட்டத்தில் மின்சாரம் தாக்கி சரவணன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News