செய்திகள்
மின்சார நிறுத்தம்

விழுப்புரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2020-07-21 13:50 GMT   |   Update On 2020-07-21 13:50 GMT
விழுப்புரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம்:

விழுப்புரம் கிழக்குபுதுச்சேரி சாலையில் விரிவாக்கப்பணிகள் நாளை(புதன் கிழமை) நடைபெற உள்ளது. இதன்காரணமாக நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ராகவன்பேட்டை, சாலைஅகரம், திருநகர், கம்பன் நகர், தேவநாதசுவாமி நகர், ஆசிரியர் நகர், மாருதி நகர், தொடர்ந்தனூர், அனிச்சம்பாளையம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை விழுப்புரம் மின்சார வாரிய செயற்பொறியாளர் சைமன்சார்லஸ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News