செய்திகள்
திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி கண்டக்டர் பலி
திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே உள்ள சாரம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி கண்ணன் (வயது 40). இவர், சென்னை மாநகர அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று காலை தனது உறவினர் வீட்டில் மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கியதில் கோபிகண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டிவனம் அருகே உள்ள சாரம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி கண்ணன் (வயது 40). இவர், சென்னை மாநகர அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று காலை தனது உறவினர் வீட்டில் மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கியதில் கோபிகண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.