செய்திகள்
கோப்புப்படம்

8 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு- தமிழகத்தில் 3ம் இடம் பிடித்த மதுரை

Published On 2020-07-18 03:32 GMT   |   Update On 2020-07-18 03:32 GMT
மதுரை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி 245 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,103 ஆக உள்ளது.
மதுரை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 7,858 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று காலை நிலவரப்படி 245 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,103 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மதுரை மாவட்டம் கொரோனா பாதிப்பில் 3-ம் இடத்தில் உள்ளது.

இதுவரை 4,677 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 138 பேர் உயிரிழந்துள்ளனர். 
Tags:    

Similar News