செய்திகள்
விபத்து பலி

பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

Published On 2020-07-15 07:16 GMT   |   Update On 2020-07-15 07:16 GMT
பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கோவிந்தன்(வயது 60). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கூலி வேலைக்கு செல்வதற்காக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை நடந்து கொண்டே கடந்து சென்றார். அப்போது அந்த வழியே ஒரு தனியார் ஷோரூமில் பணிபுரிந்துவரும், விக்ரவாண்டி தாலுகா பொண்ணங்குப்பம் ஆசூரை சேர்ந்த தமிழரசன் என்பவர் சென்ற மோட்டார் சைக்கிள் கோவிந்தன் மீது வேகமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தனை, 108 ஆம்புலன்சு வேனில் ஏற்றி பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்பு மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கோவிந்தனின் மகன் ராமச்சந்திரன் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News