செய்திகள்
கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி

கோவை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று

Published On 2020-07-15 06:37 GMT   |   Update On 2020-07-15 06:37 GMT
கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை:

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மக்கள் நலப்பணியில் ஈடுபடும் அமைச்சர்கள், போலீசார் மற்றும் பல்வேறு தரப்பினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று இருப்பதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவையில் நேற்று வரை 1,480 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 338 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 
Tags:    

Similar News