செய்திகள்
ஊரடங்கு உத்தரவை மீறிய 174 பேர் மீது வழக்கு
சேலம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 174 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நேற்று முன்தினம் தளர்வு இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. சேலம் மாநகரில் இந்த ஊரடங்கு உத்தரவை மீறி வெளிவந்ததாக 113 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 97 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் புறநகர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் சாலையில் சுற்றியதாக 61 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 174 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நேற்று முன்தினம் தளர்வு இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. சேலம் மாநகரில் இந்த ஊரடங்கு உத்தரவை மீறி வெளிவந்ததாக 113 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 97 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் புறநகர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் சாலையில் சுற்றியதாக 61 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 174 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.