செய்திகள்
வேலாயுதம்பாளையம் அருகே மது விற்ற வாலிபர் கைது
வேலாயுதம்பாளையம் அருகே மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலாயுதம்பாளையம்:
வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் நேற்று தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அய்யம்பாளையம் டாஸ்மாக் கடைக்கு பின்புறம், கரூர் காந்திசாலை மெயின் ரோடு, திருவள்ளுவர் மைதானம் பகுதியை சேர்ந்த பரத் (வயது 24) என்பவர் மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் நேற்று தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அய்யம்பாளையம் டாஸ்மாக் கடைக்கு பின்புறம், கரூர் காந்திசாலை மெயின் ரோடு, திருவள்ளுவர் மைதானம் பகுதியை சேர்ந்த பரத் (வயது 24) என்பவர் மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.