செய்திகள்
தனிமைப்படுத்தப்பட்டவர்களை வீடியோ கால் மூலம் பேசி உறுதிசெய்யும் மாநகராட்சி அதிகாரிகள்
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டில் தான் உள்ளனரா? என “வீடியோ கால்“ மூலம் பேசி மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்கின்றனர்.
கோவை:
கோவை மாநகராட்சியில் 31 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 1185 -க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வீட்டில் தான் உள்ளார்களா? என மாநகராட்சி அதிகாரிகள் உறுதிசெய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் “வாட்ஸ் அப் “ மூலம் வீடியோ கால் பேசி மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்கின்றனர். மேலும் அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும் வீடியோ காலில் ஆலோசனை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “வீடியோ கால் மூலம் பேசி மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்த பின்னர். அவர்களின் மன அழுத்தத்தை குறைக் கவும் மருத்துவர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் நல்ல பயன் அளிக்கிறது,” என்றனர்.