செய்திகள்
தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா தொற்று: 4,163 டிஸ்சார்ஜ்- 64 பேர் பலி
தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,163 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் 3 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. நேற்று 4 ஆயிரத்தை தாண்டியிருந்தது.
இந்நிலையில் இன்று 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது.
ஆறுதல் அளிக்கும் விதமாக இன்று மட்டும் 4,163 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 82,324 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 46,105 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இன்று 64 பேர் (தனியார் மருத்துவமனையில் 17 பேர்) உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 1,829 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 37,921 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், 35,921 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.