செய்திகள்
மூதாட்டி தற்கொலை

சிவகாசி அருகே மூதாட்டி தற்கொலை

Published On 2020-07-10 12:35 GMT   |   Update On 2020-07-10 12:35 GMT
சிவகாசி அருகே மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:

சிவகாசி முருகன் காலனியை சேர்ந்த கருப்பையா மனைவி சரஸ்வதி(வயது 66). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த மூதாட்டி சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News