செய்திகள்
கோப்புபடம்

திருநின்றவூரில் டிராவல்ஸ் உரிமையாளர் கொலை வழக்கில் 5 பேர் கைது

Published On 2020-07-10 12:24 GMT   |   Update On 2020-07-10 12:24 GMT
திருநின்றவூரில் முன்விரோதம் காரணமாக டிராவல்ஸ் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி:

ஆவடியை அடுத்த திருநின்றவூர் சம்பங்கி நகர், முதல் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 37). கார், ஆட்டோ வைத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை செல்வராஜ் நகர் அருகே 5 பேர் கொண்ட கும்பல் மகேந்திரனை அரிவாளுடன் ஓட ஓட விரட்டியது. மளிகை கடைக்குள் தஞ்சமடைந்த அவரை கடைக்குள் புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். முன்விரோதம் காரணமாக கடந்த இந்த கொலை தொடர்பாக திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

பின்னர் சம்பவம் தொடர்பாக தமிழ்ச்செல்வன் (27), அபிமன்யு (21), ஆட்டோ டிரைவர் கிஷோர் (20), மெக்கானிக் அத்திஷ்குமார் என்ற அப்பு (22) மற்றும் தமிழ்மாறன் (20) ஆகிய 5 பேரை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News