செய்திகள்
கொத்தனார் பலி

பெரம்பலூர் அருகே விபத்தில் படுகாயமடைந்த கொத்தனார் பலி

Published On 2020-07-08 06:43 GMT   |   Update On 2020-07-08 06:43 GMT
பெரம்பலூர் அருகே விபத்தில் படுகாயமடைந்த கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகேயுள்ள செஞ்சேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). கொத்தனரான இவர் சம்பவத்தன்று செஞ்சேரி புறவழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த சிவக்குமார் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News