search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொத்தனார் பலி"

    • சம்பவத்தன்று மாடியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.
    • சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் உடலை கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    நத்தம்:

    நத்தம் அருகே கூவனூத்து குரும்பபட்டியை சேர்ந்தவர் வினோத்.(வயது33). கொத்தனார். இவர் நத்தம்- திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மாடியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.

    இதில் சம்பவ இடத்திலேயே வினோத் பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் வினோத்தின் உடலை கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • காலை 6 மணி அளவில் தென்பெண்ணையாற்றிற்கு சென்றுள்ளார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கரடிப்பாக்கம் ரோட்டு தெரு பகுதியை சேர்ந்தவர் அழகப்பன் (வயது 51 ), இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். கடந்த 24ந் தேதி காலை 6 மணி அளவில் தென்பெ ண்ணையாற்றிற்கு சென்றுள்ளார். ஆற்றில் உள்ள தண்ணீரில் கால்கள் கழுவ சென்றவர் மயங்கி ஆற்றில் உள்ள தண்ணீரில் தவறி விழுந்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார் .அந்தப் பக்கம் சென்றவர்கள் அவரை தண்ணீரில் இருந்து மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் தினேஷ் கொடு த்த புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • மின்விளக்கை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குமார் கொண்டு சென்றார்.
    • தூக்கி வீசப்பட்ட குமார் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார்.

    தாம்பரம்:

    பல்லாவரம், குளத்து மேடு, வேம்புலியம்மன் கோயில் 7-வது தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். அதே பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். அங்கு சிலுவை முத்து என்ற மேஸ்திரியும், குமார் (45) என்ற கொத்தனாரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது மின்விளக்கை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குமார் கொண்டு சென்றார். இதில் எதிர்பாராத விதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. தூக்கி வீசப்பட்ட குமார் அந்த இடத்திலேயே மயங்கி சுருண்டு விழுந்து இறந்தார்.

    இதுகுறித்து பல்லாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னங்குறிச்சியில் பாய் தடுக்கி கீழே விழுந்த கொத்தனார் பரிதாப இறந்தார்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் கன்னங்குறிச்சி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 55), கொத்தனார். இவருக்கு கருப்பாயி என்ற மனைவியும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். வெங்கடேசன் நேற்று இரவு வீட்டில் பாய் போட்டு படுத்திருந்தார்.

    அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டது. இதனால் எழுந்து வெளியே வர முயன்றார். அப்போது பாய் தடுக்கி வெங்கடேசன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    • வடமதுரை அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் கொத்தனார் உயிரிழந்தார்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே ஆண்டி மா நகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் (வயது17). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.

    தனது தந்தை ஆறுமுகத்துடன் வாகனத்தில் வட மதுரையில் இருந்து வெள்ளைபொம்மன்பட்டி சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த வேன் மோதியது. இதில் தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    ஆறுமுகம் லேசான காயங்களுடன் தப்பினார். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விடுதி 2-வது மாடியில் கான்கிரீட் கம்பிகளை எடுத்து வைத்தனர்.
    • உயர்மின்னழுத்த மின்கம்பிகள் மீது கான்கிரீட் கம்பி பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதி கட்டிடத்தை பழுது பார்க்கும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. ஊட்டி நொண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் ஆறுமுகம் (வயது 55) மற்றும் தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். விடுதி 2-வது மாடியில் கான்கிரீட் கம்பிகளை எடுத்து வைத்தனர்.

    ஆறுமுகம் கான்கிரீட் கம்பியை மேலே தூக்கி திருப்பி வைக்க முயன்றார். அப்போது அருகே சென்ற உயர்மின்னழுத்த மின்கம்பிகள் மீது கான்கிரீட் கம்பி பட்டது. இதனால் கம்பியில் மின்சாரம் பாய்ந்து ஆறுமுகத்தை தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதை பார்த்த சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் ஆறுமுகத்தை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். போலீசார் விசாரணை அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி நகர மேற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தங்கும் விடுதி உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி கொத்தனார் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×