திருவெண்ணைநல்லூர் அருகே ஆற்றில் விழுந்த கொத்தனார் பலி

காலை 6 மணி அளவில் தென்பெண்ணையாற்றிற்கு சென்றுள்ளார். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவெண்ணைநல்லூர்  அருகே  ஆற்றில் விழுந்த கொத்தனார் பலி
Published on

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் கரடிப்பாக்கம் ரோட்டு தெரு பகுதியை சேர்ந்தவர் அழகப்பன் (வயது 51 ), இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். கடந்த 24ந் தேதி காலை 6 மணி அளவில் தென்பெ ண்ணையாற்றிற்கு சென்றுள்ளார். ஆற்றில் உள்ள தண்ணீரில் கால்கள் கழுவ சென்றவர் மயங்கி ஆற்றில் உள்ள தண்ணீரில் தவறி விழுந்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார் .அந்தப் பக்கம் சென்றவர்கள் அவரை தண்ணீரில் இருந்து மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் தினேஷ் கொடு த்த புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com