செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும்- நகரசபை கமிஷனர் வேண்டுகோள்

Published On 2020-07-07 14:00 GMT   |   Update On 2020-07-07 14:00 GMT
தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைவரும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் முடிவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் படி நகரசபை கமிஷனர் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி ஆகிய பகுதிகளில் கொரோனாவின் தாக்குதல் அதிகமாக உள்ளது. எனவே இந்த பகுதிகளை பேரிடர் மேலாண்மை துறை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்துள்ளது. எனவே தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், தொழில்நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைவரும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் முடிவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் படி நகரசபை கமிஷனர் பார்த்தசாரதி கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News