செய்திகள்
ஆரணி சூரியகுளம் சுற்றுச்சுவர் இடிந்த இடத்தில் தடுப்பு அமைக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை
ஆரணி சூரியகுளம் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த இடத்தில் தற்காலிக தடுப்புகளை அமைத்தாவது பொதுமக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
ஆரணி:
ஆரணி நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள சூரியகுளம் கரையில் வடக்கு, மேற்கு, தெற்கு ஆகிய 3 பக்கமும் சுற்றுச்சுவர்கள் இருந்தன. சமீபத்தில் பெய்த மழையால் சூரியகுளம் வடக்குப் பக்கம் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் இரவில் வழி தெரியாமல் வரும் பொதுமக்களுக்கும், குடிபோதையில் வரும் குடிமகன்களுக்கும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது.
நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சூரியகுளம் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த இடத்தில் தற்காலிக தடுப்புகளை அமைத்தாவது பொதுமக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
ஆரணி நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள சூரியகுளம் கரையில் வடக்கு, மேற்கு, தெற்கு ஆகிய 3 பக்கமும் சுற்றுச்சுவர்கள் இருந்தன. சமீபத்தில் பெய்த மழையால் சூரியகுளம் வடக்குப் பக்கம் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் இரவில் வழி தெரியாமல் வரும் பொதுமக்களுக்கும், குடிபோதையில் வரும் குடிமகன்களுக்கும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது.
நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சூரியகுளம் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த இடத்தில் தற்காலிக தடுப்புகளை அமைத்தாவது பொதுமக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.