செய்திகள்
தோகைமலை மெயின்ரோடு பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தோகைமலை:
தோகைமலை மெயின்ரோடு பகுதியில் குளித்தலை உதவி-கலெக்டர் ஷேக் அப்துல்ரகுமான் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, கொரோனா வைரஸ் தொற்று பரவும் வகையில், ஒரு மளிகைக்கடையில் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருப்பதை கண்டு அந்த கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்து, கடையை மூட உத்தரவிட்டார்.
பின்னர் முககவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் 7 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தார். இந்த ஆய்வின்போது, தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், தோகைமலை ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.