செய்திகள்
கைது

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் பெண் கொலை- கள்ளக்காதலன் கைது

Published On 2020-07-04 09:35 GMT   |   Update On 2020-07-04 09:35 GMT
காவேரிப்பட்டணம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மணிமடி கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாது. இவர் இறந்து விட்டார். இவரது மனைவி மலர் (வயது 38). அங்குள்ள நிப்பட் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அதேபகுதியைச் சேர்ந்தவர் காந்தி (29). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் மலருக்கும், காந்திக்கும் (29) இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதற்கிடையில் மலரின் நடத்தையில் காந்திக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன்காரணமாக அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் மலரை கொலை செய்ய காந்தி முடிவு செய்தார். அதன்படி சம்பவத்தன்று அவர் மணிமடி கொட்டாய் பகுதியில் ஒரு கால்வாய் பகுதிக்கு மலரை அழைத்து சென்றார். அங்கு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மலரை சரமாரியாக குத்தினார். இதில் பலத்தகாயம் அடைந்த அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து காந்தி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மலரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த கொலை தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் பெண்ணை, கள்ளக்காதலன் குத்திக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News