search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்காதலன் கைது"

    • சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக இறந்தார்.
    • கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருத்தணி:

    திருத்தணி அருகே உள்ள கனகம்மாசத்திரம், பாளையக்கார தெருவை சேர்ந்தவர் சசிகலா (வயது33). இவருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சசிகலா கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் திருத்தணி காந்தி ரோடு பகுதியில் கழுத்து அறுபட்ட நிலையில் சசிகலா உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரது உடல் முழுவதும் கத்திக்குத்து காயமும் இருந்தது.

    உடனடியாக அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக இறந்தார். விசாரணையில் கள்ளக்காதலில் சசிகலா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக முத்து கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் சசிகலாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தோம். சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து இருந்தபோது எனக்கு கடன் பிரச்சினை இருந்ததால் ரூ.2 ½ லட்சம் பணம் கேட்டேன். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் சசிகலா அணிந்து இருந்த நகையை பறிக்க முயன்றபோது என்னை தாக்கி தள்ளிவிட்டார். கோபம் அடைந்த நான் அவரது கழுத்தை கத்தியால் அறுத்தும், சரமாரியாக குத்தியும் விட்டு தப்பி ஓடிவிட்டேன். இதில் பலத்த காயம் அடைந்த சசிகலா இறந்து போனார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோபால் திருமணம் செய்ய மறுத்து தட்டிக்கழித்து வந்தார்.
    • மனம் உடைந்த காதலி விஷ மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் அருகே அக்கரைபாளையம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் (வயது 23) தனது கணவரை பிரிந்து தன்னுடைய 3 வயது ஆண் குழந்தையுடன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

    இப்பெண்ணுக்கும், பாலம்பட்டி பகுதியை சேர்ந்த தேங்காய் வியாபாரி கோபால் (33) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி அவர்களுக்கு இடையே ரகசிய உறவு ஏற்பட்டது. இதையடுத்து கோபால் திருமணம் செய்ய மறுத்து தட்டிக்கழித்து வந்தார். சம்பவத்தன்று இரவு கோபால் தனது தோட்டத்து வீட்டில் இருந்தார். அங்கு சென்ற காதலி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கோபாலிடம் வற்புறுத்தி உள்ளார். கோபால் மறுக்கவே அவருடன் காதலி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    அப்படி இருந்தும் கோபால் தன்னுடைய நிலையில் பிடிவாதமாக இருந்தார். இதில் மனம் உடைந்த காதலி விஷ மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலை கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார், அவரை அழைத்துச்சென்று சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    கள்ளக்காதலன் திருமணத்துக்கு மறுத்ததால் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பலமுறை போன் செய்தும் எடுக்காததால் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த காலூர் மதுரா செல்வாநகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி கேயன்,கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (வயது 45). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே உள்ள திண்ணையில் கழுத்தை அறுத்து கொலை செய்யப் பட்டு கிடந்தார்.

    இது குறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சாந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கள்ளக்காதலன் பால்நகரை சேர்ந்த செந்தில்குமார் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-

    சாந்திக்கும், செந்தில்குமாருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. தற்போது சாந்தி, செந்தில்குமாருடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் குடி போதையில் செந்தில்குமார் பலமுறை சாந்திக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அவர் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து சென்று, தூங்கிக்கொண்டிருந்த சாந்தியின் கழுத்தை சரமாரியாக அறுத்துள்ளார்.

    செந்தில்குமார், சாந்திக்கு செல்போன் செய்ததை வைத்து அவரை கைதுசெய்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஜோகேந்திராவின் தந்தை மிஸ்ரலால் மேக்வால் உள்ளூர் போலீசில் கடந்த 13-ந்தேதி புகார் அளித்தார்.
    • கணவர் வேலைக்கு சென்றபிறகு கள்ளக்காதலன் மதன்லாலுடன் ஜோகேந்திராவின் மனைவி பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியைச் சேர்ந்தவர் மிஸ்ரலால் மேக்வால் மகன் ஜோகேந்திரா (வயது 33). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்ற ஜோகேந்திரா இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜோகேந்திரா வேலை பார்த்த நிறுவனம் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து ஜோகேந்திராவின் தந்தை மிஸ்ரலால் மேக்வால் உள்ளூர் போலீசில் கடந்த 13-ந்தேதி புகார் அளித்தார். அப்போது மகன் மாயமானதற்கும், மதன்லால் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜோகேந்திராவை தேடி வந்தனர். மேலும் மதன்லால் என்பவரிடம் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் ஜோகேந்திரா கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது ஜோகேந்திராவின் மனைவிக்கும், மதன்லால் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது கள்ளக்காதலாக மாறி தொடர்ந்து வந்துள்ளது.

    கணவர் வேலைக்கு சென்றபிறகு கள்ளக்காதலன் மதன்லாலுடன் ஜோகேந்திராவின் மனைவி பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். நாளடைவில் இந்த விஷயம் தெரிந்த ஜோகேந்திரா மனைவியை கண்டித்தார். ஆனால் அவர் இதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கணவர் ஜோகேந்திராவை தீர்த்துக்கட்ட மதன்லாலிடம் கூறியுள்ளார்.

    தொடர்ந்து தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்து வரும் ஜோகேந்திராவை கொலை செய்ய மதன்லால் திட்டம் போட்டார். அதன்படி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த ஜோகேந்திராவை அழைத்து சென்று கொடூராமாக கொலை செய்துள்ளார்.

    பின்னர் அந்த உடலை தலை, கை, கால்கள் என 6 துண்டுகளாக்கினார். அந்த உடல் பாகங்களை தனது வீட்டில் இருந்து இரவு நேரத்தில் எடுத்துச் சென்று சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள தோட்டம் மற்றும் காட்டுப்பகுதிக்குள் புதைத்துள்ளார். அதனை மதன்லால் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் மீட்டனர்.

    மேலும் கொலையை மறைக்கும் விதமாகவும், உடல் புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடிக்காமல் இருக்கவும் உடல் பாகங்களை புதைத்த இடத்தில் மதன்லால் மா மரக்கன்றுகளை நட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கொலையுண்ட ஜோகேந்திராவின் தந்தை மிஸ்ரலால் மேக்வால் கூறுகையில், தனது மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மதன்லால் தவிர மேலும் சிலர் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. எனவே இதில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

    இந்த கொடூர கொலை சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×