செய்திகள்
மருத்துவ முகாம்

புன்னம்சத்திரத்தில் மருத்துவ முகாம்

Published On 2020-07-04 07:37 GMT   |   Update On 2020-07-04 07:37 GMT
புன்னம்சத்திரம் மற்றும் பொன்னியாக்கவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
நொய்யல்:

கரூர் மாவட்டம் புன்னம்சத்திரத்தில் மளிகைக்கடை நடத்தி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து புன்னம்சத்திரம் மற்றும் பொன்னியாக்கவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில், க.பரமத்தி வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் அருண்குமார் தலைமையிலான குழுவினர், புன்னம்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளதா என பரிசோதனை செய்தனர்.
Tags:    

Similar News