செய்திகள்
திருப்பத்தூர் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
திருப்பத்தூர் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
கந்திலி அருகே உள்ள தோக்கியும் கிராமத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் காவியா (வயது 20). இவர், வீட்டில் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இதுகுறித்து அவரது தாய் செல்போனில் யாருடன் அடிக்கடி பேசுகிறாய் என கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த காவியா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்திலி அருகே உள்ள தோக்கியும் கிராமத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் காவியா (வயது 20). இவர், வீட்டில் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இதுகுறித்து அவரது தாய் செல்போனில் யாருடன் அடிக்கடி பேசுகிறாய் என கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த காவியா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.