செய்திகள்
புலியூர் நாகராஜன் கொரோனாவுக்கு பலி
தமிழ் மாநில காங்கிரசின் மாநில விவசாய அணி செயலாளர் புலியூர் நாகராஜன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை 701 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 369 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று தமிழ் மாநில காங்கிரசின் மாநில விவசாய அணி செயலாளர் புலியூர் நாகராஜன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
64 வயதான புலியூர் நாகராஜனுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா உறுதியான சென்னையை சேர்ந்த 40 வயதான பெண், திருச்சி வாசன் நகரை சேர்ந்த முதியவர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை 701 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 369 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று தமிழ் மாநில காங்கிரசின் மாநில விவசாய அணி செயலாளர் புலியூர் நாகராஜன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
64 வயதான புலியூர் நாகராஜனுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா உறுதியான சென்னையை சேர்ந்த 40 வயதான பெண், திருச்சி வாசன் நகரை சேர்ந்த முதியவர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.