செய்திகள்
அடகுக்கடை திருட்டு

செங்கம் அருகே அடகுக்கடையில் திருட்டு

Published On 2020-07-01 14:18 GMT   |   Update On 2020-07-01 14:18 GMT
செங்கம் அருகே அடகுக்கடையில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம்:

செங்கம் அருகே கரியமங்கலம் பகுதியில் மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. அதே கட்டிடத்தின் முன்பகுதியில் புதுக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் நடத்தி வரும் அடகுக்கடையும் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் மின்சார வாரிய அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே திருட சென்றனர். ஆனால் அலுவலகத்தில் பணம் ஏதும் இல்லாததால் மர்ம நபர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அதைத்தொடர்ந்து அதே கட்டிடத்தின் முன்பகுதியில் உள்ள அடகுக்கடையின் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செங்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News