செய்திகள்
சேலம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூரமங்கலம்:
சேலம் அருகே மாரமங்கலத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சித்ரா (வயது 29). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் வீட்டில் இருந்த சித்ரா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அருகே மாரமங்கலத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சித்ரா (வயது 29). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் வீட்டில் இருந்த சித்ரா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.