செய்திகள்
நாமக்கல் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
நாமக்கல் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள மரூர்பட்டி கொசவனூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). லாரி டிரைவர். இவரது மனைவி சுகுணா (23). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
மணிகண்டன் மது குடிக்கும் பழக்கம் உடையவர் என கூறப்படுகிறது. ஆனால் சுகுணா மது குடிக்க கூடாது என வலியுறுத்தி வந்தார். ஆனால் மணிகண்டன் தொடர்ந்து மது குடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த சுகுணா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன சுகுணாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைகுமாரும் விசாரணை நடத்தி வருகிறார்.
நாமக்கல் அருகே உள்ள மரூர்பட்டி கொசவனூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). லாரி டிரைவர். இவரது மனைவி சுகுணா (23). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
மணிகண்டன் மது குடிக்கும் பழக்கம் உடையவர் என கூறப்படுகிறது. ஆனால் சுகுணா மது குடிக்க கூடாது என வலியுறுத்தி வந்தார். ஆனால் மணிகண்டன் தொடர்ந்து மது குடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த சுகுணா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன சுகுணாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைகுமாரும் விசாரணை நடத்தி வருகிறார்.