செய்திகள்
தற்கொலை

மணப்பாறையில் திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

Published On 2020-06-29 10:43 GMT   |   Update On 2020-06-29 10:43 GMT
மணப்பாறை அருகே திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
மணப்பாறை:

மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (வயது 25). இவருக்கும், கல்லாமேடு அருகே உள்ள கவுண்டம்பட்டியை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர், நாகராஜ் தனது மனைவியை மஞ்சம்பட்டியில் உள்ள அவரது அம்மா வீட்டில் விட்டு, விட்டு கோவைக்கு வேலைக்கு சென்று விட்டார்.

இந்தநிலையில், நேற்று வீட்டில் இருந்த உமா மகேஸ்வரிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை உறவினர்கள், மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். எலி மருந்தை(விஷம்) தின்று அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவரது உடல் கவுண்டம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வளநாடு மற்றும் மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உமா மகேஸ்வரிக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் ஸ்ரீரங்கம் உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News