செய்திகள்
கொலை

தொழிலாளி கொலை வழக்கு: வாலிபர் கைது

Published On 2020-06-28 12:26 GMT   |   Update On 2020-06-28 12:26 GMT
சிவகாசி அருகே தொழிலாளி கொலை வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:

சிவகாசி அருகே உள்ள துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் விக்னேஷ்குமார் (வயது 30). இவருடைய மனைவி தனலட்சுமி(29). இவர் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் படந்தால் கிராமத்தில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 24-ந் தேதி நள்ளிரவு தனலட்சுமி வீட்டில் இருக்கும் போது திருத்தங்கல் பகுதியை சேர்ந்த தொழிலாளியான சதீஷ்(25) என்பவர் வந்தார். இந்தநிலையில் அங்கு விக்னேஷ்குமாரும் வந்துள்ளார். அப்போது தன்னிடம், சதீஷ் தகாத முறையில் நடக்க முயன்றதாக தனலட்சுமி, விக்னேஷ்குமாரிடம் கூறினாராம். இதையடுத்து கணவன், மனைவி ஆகிய 2 பேரும் சேர்ந்து சதீசை கல்லால் தாக்கி கொலை செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலெட்சுமியை கைது செய்தனர். தலைமறைவான விக்னேஷ்குமாரை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபக்குமார் தலைமையில் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் சிவகாசியில் நேற்று சுற்றி திரிந்த விக்னேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக அவருக்கு சாத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
Tags:    

Similar News