செய்திகள்
கனிமொழி

நமக்கு நீதி கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்?- கனிமொழி

Published On 2020-06-28 09:25 GMT   |   Update On 2020-06-28 09:25 GMT
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் அரசிடமிருந்து, கொலையாளிகள் தண்டிக்கப்பட்டு நமக்கு நீதி கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்? என கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளார்.
சென்னை:

சாத்தன்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது லாக் - அப் மரணம் இல்லை என்று கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்கு திமுக எம்.பி.கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் மூச்சுத்திணறலாலும், உடல்நலக் குறைவாலும் உயிரிழந்தனர் என்று முதல்வர் கூறினார். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் இது லாக்-அப் மரணம் கிடையாது என்று கூறுகிறார். இந்த அரசிடமிருந்து, கொலையாளிகள் தண்டிக்கப்பட்டு நமக்கு நீதி கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்? முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை காப்பாற்றுவதற்கு முயற்சிப்பது  வெளிப்படையாகத் தெரிகிறது.

இவ்வாறு அவர் டுவிட்டரில் கூறியுள்ளார். 
Tags:    

Similar News