செய்திகள்
மெக்கானிக் தற்கொலை

சேலம் அருகே மெக்கானிக் தற்கொலை

Published On 2020-06-27 13:30 GMT   |   Update On 2020-06-27 13:30 GMT
சேலம் அருகே மெக்கானிக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் தென் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (வயது 40), டிராக்டர் மெக்கானிக். இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுகுமார் வீட்டில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். சுகுமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News