செய்திகள்
விபத்து பலி

கமுதி அருகே விபத்தில் கிராம நிர்வாக அலுவலர் பலி

Published On 2020-06-27 13:11 GMT   |   Update On 2020-06-27 13:11 GMT
கமுதி அருகே விபத்தில் கிராம நிர்வாக அலுவலர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கமுதி:

கமுதி அருகே கள்ளிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கர்ணன் (வயது 32). இவர் பாக்குவெட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். கொரோனா தடுப்பு பணி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கர்ணன், கிராம உதவியாளர் மலைச்சாமி ஆகியோர் தனித்தனியே மோட்டார் சைக்கிளில் முஸ்டக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். பாக்குவெட்டி விலக்கு ரோடு அருகே இவர்களது மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் கிராம நிர்வாக அலுவலர் கர்ணன் படுகாயம் அடைந்தார். உடனே அவர் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக பேரையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News