செய்திகள்
முககவசம்

முககவசம் அணியாமல் சென்ற 26 பேருக்கு அபராதம்

Published On 2020-06-26 14:32 GMT   |   Update On 2020-06-26 14:32 GMT
பெரம்பலூர் அருகே முககவசம் அணியாமல் சென்ற 26 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரிமன்னன் உத்தரவின் பேரில், தூய்மை ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோர் தலைமையில் பொது சுகாதார பணி மேற்பார்வையாளர்கள் பெரம்பலூர் கடை வீதியில் ரோந்து சென்றனர். அப்போது முககவசம் அணியாமல் கடைவீதிக்கு வந்த 26 பேரிடம் தலா ரூ.100 அபராதம் விதித்து, அதனை அவர்களிடம் வசூலித்தனர்.
Tags:    

Similar News