செய்திகள்
விபத்து

மோட்டார் சைக்கிள்கள் மோதல்: தந்தை-மகள் உள்பட 3 பேர் பலி

Published On 2020-06-26 08:23 GMT   |   Update On 2020-06-26 08:23 GMT
கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தந்தை-மகள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கெடக்கானூரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் மனைவி ஜீவா (27), குழந்தைகள் அகஸ்தியாஸ்ரீ (6), கிரிதரன் (3) ஆகியோருடன் மோட்டார்சைக்கிளில் கெடக்கானூரிலிருந்து குன்னத்தூர் சென்றார். பின்னர் அவர் மீண்டும் நேற்று முன்தினம் இரவு கெடக்கானூர் திரும்பி கொண்டிருந்தார். சின்னகுன்னத்தூர் மன்னார்குடி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து மோதியது.

இதில் எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த சின்ன குன்னத்தூரை சேர்ந்த டிரைவர் சக்திவேல் (20) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். பிரகாஷ் மற்றும் ஜீவா, குழந்தைகள் படுகாயமடைந்தனர். அவர்களை ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த குழந்தை அகஸ்தியாஸ்ரீயும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தாள். இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News